வணக்கம் நண்பர்களே..
மிக நீண்ட காலத்திற்கு பிறகு இறந்து மடிந்து கிடந்த எனது வலைப்பதிவு உயிர்த்தெழுந்து இருக்கிறது. இசை ஞானி இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இளையராஜா பாடியப் 'பறவையே எங்கு இருக்கிறாய்' பாடல் கற்றது தமிழ் திரைப்படத்திற்காக. இப்பாடலை கேட்டு கொண்டு பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருக்கையில் இந்த யோசனை. ஆனந்தியாக நடித்த அஞ்சலிக்கு மாறாக எல்லோரும் விரும்பும் பிரியாணியை முன்னிலை படுத்தி பாடியிருந்தால் எப்படி இருக்குமென்று. கணநேரத்தில் உதயமான இந்த யோசனையைதான் இந்த பதிவுக்கு காரணம். பாடலின் இணைப்பும் இதனுடன் இணைத்துள்ளேன்.
என் வாழ்க்கைல நான் சாப்பிடறது மூணே மூணு பிரியாணி தான்..
Still, I remember my first delicious chicken biryani..
Prabha, நீ என்ன தேடிற்பனு எனக்கு தெரியும்..
நானு மட்டன் பிரியாணியும் ஹைதெராபாத்ல Paradise ஹோட்டல்ல இருக்கோம்..
நீ வர்றதுக்கோ வந்து சாப்பிடறதுக்கோ ஏத்த சமயம் வரும் போது சொல்றேன்..
நேரத்துக்கு சாப்பிடு..
வாரத்துக்கு மூணு வாட்டியாவது என்ன சாப்பிடு..
அந்த பிளேட்ட கழுவி சாப்பிடு..
எலும்பு கடிச்சுக்க..
கறிக்கடை பாய் வேண்டிக்கோ..
பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..
பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..
அட நான் காலை சாப்பிடும் உணவேது நீதானே...
அட என் நினைவு இருக்கும் இடமெது நீதானே..
நுகரும் திசைகள் எல்லாம் பிரியாணி வாசம் வருதே..
கறிதான் கானலின் நீரில் தெரிவதுண்டோ..
ருசிதான் பொய்கள் சொல்வதுண்டோ..
பிரியாணி மசாலா வாசம் கடலாக..
அதில் மிதந்தேனே நானும் அன்பே படகாக..
பிரியாணி எங்கு இருக்கிறாய்..
சாப்பிடவே என்னை அழைக்கிறாய்..
வாசனைத் தேடி வருகிறேன் அன்பே..
உன்னை நானும் சாப்பிடும் பிளேட்
இது நீளாதோ தொடு வானம் போலவே...
கறிக் கடிச்சுக்கொண்டே வா எலும்பை ஒதுக்கி வைப்போம்..
கறிதானே தீர்ந்தாலும் உன் சோறு போதுமே..
இந்த கறி சோறு பிரியாணி மசாலா போதாத...
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாத...
முதல் முறை வாழப் பிடிக்குதே..
முதல் முறை ஹோட்டல் திறக்குதே...
முதல் முறை சமைச்ச பிரியாணி கூப்பிடுதே..
முதல் முறை கதவு திறக்குதே..
முதல் முறை வாசம் வருகுதே..
முதல் முறை கனவு பலிக்குதே கறியே...
பிரியாணி வாசனை சமைக்கும் போது தோன்றுகின்ற
ஒரு வாசம் ஆகும்..
மூடிப் போட்டும் ஒரு தடையுமின்றி
மணமாறாமல் காற்றோடு காற்றாகிடுவோம்..
இதோ இதோ இந்த பசியினிலே..
இது போதும் பிரியாணி..
வேறென்ன நானும் கேட்பேன்..
சாப்பிடலானாலும் மனதிலே
இந்த நொடியில் என்றும் வாழ்வேன்..
இந்த நிகழ்காலம் இப்டியே தான் தொடராத..
என் பிரியாணி தேடல் இன்றுடன் முடியாத..
முதல் முறை வாழப் பிடிக்குதே..
முதல் முறை ஹோட்டல் திறக்குதே...
முதல் முறை சமைச்ச பிரியாணி கூப்பிடுதே..
முதல் முறை கதவு திறக்குதே..
முதல் முறை வாசம் வருகுதே..
முதல் முறை கனவு பலிக்குதே கறியே..
பாடல் இணைப்பு கீழே -
Comments
Post a Comment